இரு நாட்டு தலைவர்களும் முதலில் புகழ்பெற்ற சபர்மதி காந்தி ஆசிரமத்திற்கு சென்று பார்வையிட உள்ளனர். காந்தி ஆசிரமத்தை பார்வையிட உள்ள முதல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
இதனைத் தொடர்ந்து, சர்தார் படேல் அரங்கம் என்று அறியப்படும் புதுப்பித்து கட்டப்பட்ட மொடேரா விளையாட்டு அரங்கத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் திறந்து வைப்பார். பின்னர் அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் வருகைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்களை அகமதாபாத் போலீஸார் பகிர்ந்துள்ளனர்.